மகாராஷ்டிரத்தில் தாணே மாவட்டத்தில் உல்ஹாஸ் நகரில் உள்ள கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
26 ஆண்டு பழமையான இந்த கட்டடத்தில் 29 குடியிருப்புகள் உள்ளன.
இறந்தவர்கள் கட்டடத்தில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர் ஆவர்.
நேற்றிரவு 9 மணியளவில், ஐந்து அடுக்கு மாடி குடியிருப்புகளின் கட்டட ஸ்லாப் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 3 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க மாவட்ட அமைச்சர் ஏகாந்த் ஷிண்டே தெரிவித்தார்.