சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 78 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு, பேடரஹள்ளி துங்காநகரில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் சிலா் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேரை கைது செய்து, ரூ. 78 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பேடரஹள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.