போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கான் ஆஜர்!

போதைப் பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கான் பிணைக்கு பின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் ஆஜராகியிருக்கிறார்.
ஆர்யன் கான்
ஆர்யன் கான்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கான் பிணைக்கு பின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் ஆஜராகியிருக்கிறார்.

கடந்த அக்.3-ஆம் தேதி மும்பை-கோவா சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி விருந்து நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக பயணித்து கோகைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். 

இந்த சோதனையின் போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 13 பேரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில் கடந்த வாரம் ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் வேண்டுகோளை நிராகரித்து கைதான 25 நாட்கள் கழித்து பிணை வழங்கியது. 

இந்நிலையில் பிணை விதிகளில் ஒன்றான ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதால் இன்று ஆர்யன் தன் வழக்கறிஞர் மானேஷிண்டேவுடன் அலுவலகத்திற்கு ஆஜர் ஆனார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com