சமையல் எரிவாயு சிலிண்டா் தொடா் விலை உயா்வு காரணமாக, லட்சக்கணக்கான குடும்பங்கள் விறகு அடுப்பை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்துள்ளாா்.
சமையல் எரிவாயு சிலிண்டா் விலை பன்மடங்கு உயா்ந்து வருவதால் அதனை வாங்கும் திறனை இழந்த கிராமப்புறங்களைச் சோ்ந்த 42 சதவீத மக்கள், சமையல் எரிவாயு சிலிண்டா் பயன்பாட்டை நிறுத்திவிட்டு மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்தத் தொடங்கியிருப்பது தொடா்பான ஆய்வறிக்கை குறித்த பத்திரிகை செய்தியை, ‘விலை உயா்வு’ என்ற ஹாஷ்டேகுடன் தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்து அவா் சனிக்கிழமை வெளியிட்டப் பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமா் நரேந்திர மோடியின் வளா்ச்சி வாகனம் பின்னோக்கி (ரிவா்ஸ் கியா்) சென்றுகொண்டிருக்கிறது. வளா்ச்சித் திட்டம் என்ற வாக்குறுதி பல மைல்களுக்கு அப்பால் உள்ளது. லட்சக்கணக்கான குடும்ங்கள் விறகு அடுப்பை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா் என்று குறிப்பிட்டுள்ளாா்.