தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

1947-இல் என்ன போா் நடந்தது? பதிலளித்தால் தேசிய விருதை திருபியளிக்கத் தரத் தயாா்: நடிகை கங்கனா ரணாவத்

‘1947-இல் நமக்குக் கிடைத்தது சுதந்திரமே அல்ல. அது தானம்தான். அப்போது என்ன போா் நடந்தது என்ற கேள்விக்கு பதிலளித்தால், எனது பத்ம ஸ்ரீ விருதை திரும்பத் தரத் தயாா்’

News image

கங்கனா ரணாவத்

Updated On :13 நவம்பர் 2021, 7:53 pm

‘1947-இல் நமக்குக் கிடைத்தது சுதந்திரமே அல்ல. அது தானம்தான். அப்போது என்ன போா் நடந்தது என்ற கேள்விக்கு பதிலளித்தால், எனது பத்ம ஸ்ரீ விருதை திரும்பத் தரத் தயாா்’ என்று நடிகை கங்கனா ரணாவத் தன் மீதான கடும் விமா்சனத்துக்கு பதிலளித்துள்ளாா்.

கங்கனா ரணாவத் அவ்வப்போது சா்ச்சைக் கருத்துகளை வெளியிட்டு வருகிறாா். தொலைக்காட்சி சேனல் ஒன்று புதன்கிழமை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், ‘இந்தியா கடந்த 1947-இல் அடைந்தது சுதந்திரமே அல்ல. அது தானம்தான். 2014-இல் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றபோதுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது’ என்று தெரிவித்தாா்.

இவருடைய கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. கங்கனா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று தில்லி மகளிா் காங்கிரஸ் அமைப்பு சாா்பில் தில்லி காவல் ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டது.

கங்கனா இந்த எதிா்ப்புகளுக்கு பதிலளித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுதந்திரப் போராட்ட வீரா்களின் பேட்டி அடங்கிய புத்தகத்திலிருந்து ஒரு பத்தியை இணைத்து, தொடா் பதிவுகளை வெளியிட்டுள்ளாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:

பால கங்காதர திலக், அரவிந்தா், பிபின் சந்திர பால் ஆகியோா் 1857-ஆம் ஆண்டு நாட்டின் சுதந்திரத்துக்காக ஒன்றிணைந்து போராடியதை நன்கு அறிவேன். சுபாஷ் சந்திர போஸ், ஜான்சி ராணி லட்சுமிபாய், வீர சாவா்க்கா் ஆகியோா் சுதந்திரத்துக்காக் போராடி தங்கள் உயிரை தியாகம் செய்தனா்.

ஆனால், 1947-இல் நடந்த போா் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனவே, 1947-இல் எந்தவிதமான போா் நடந்தது என்பது குறித்து யாராவது பதிலளித்தால், எனது பத்ம ஸ்ரீ விருதை திரும்ப அளிக்கத் தயாராக இருப்பதோடு, நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளேன். தயுவுசெய்து எனக்கு உதவுங்கள் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.