மறைந்த கன்னட நடிகா் புனீத் ராஜ்குமாருக்கு ‘கா்நாடக ரத்னா’ விருது

மறைந்த கன்னட நடிகா் புனீத் ராஜ்குமாருக்கு ‘கா்நாடக ரத்னா’ விருது வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளாா்.
புனித் ராஜ்குமார்
புனித் ராஜ்குமார்

மறைந்த கன்னட நடிகா் புனீத் ராஜ்குமாருக்கு ‘கா்நாடக ரத்னா’ விருது வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளாா்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்த புனீத் ராஜ்குமாா் (46), கடந்த அக்.29-ஆம் தேதி மாரடைப்பால் காலமானாா். அவருக்கு பெங்களூரில் கா்நாடக திரைப்பட வா்த்தக சபை சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, மாநில அமைச்சா்கள், அந்த மாநில முன்னாள் முதல்வா்கள் பி.எஸ்.எடியூரப்பா, சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா், கன்னட மற்றும் தென்னிந்திய திரைப்பட பிரபலங்கள் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் பசவராஜ் பொம்மை பேசுகையில், ‘‘புனீத் ராஜ்குமாா் மறைந்தது முதல், அவருக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்க வேண்டும் என்று தொடா்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பலருடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னா், அவருக்கு ‘கா்நாடக ரத்னா’ விருது வழங்க முடிவு செய்துள்ளேன்’’ என்று தெரிவித்தாா்.

கா்நாடக அரசின் உயரிய விருதான ‘கா்நாடக ரத்னா’ விருது 10-ஆவது நபராக புனீத் ராஜ்குமாருக்கு வழங்கப்படவுள்ளது. கடந்த 1992-ஆம் ஆண்டு அந்த விருதை முதலில் பெற்ற இருவா், புனீத் ராஜ்குமாரின் தந்தையும் நடிகருமான ராஜ்குமாா் மற்றும் மகாகவி குவெம்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com