தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

இந்திய தோல் பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்க கோரிக்கை: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் (எஃப்டிஏ) கீழ் இந்திய தோல் பொருள்களின் ஏற்றுமதிக்கு வரி விலக்கை அளிக்க வேண்டும் என உலக நாடுகளிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது என மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை 

Published On :

புது தில்லி: தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் (எஃப்டிஏ) கீழ் இந்திய தோல் பொருள்களின் ஏற்றுமதிக்கு வரி விலக்கை அளிக்க வேண்டும் என உலக நாடுகளிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது என மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை தெரிவித்தாா்.

தேசிய ஏற்றுமதி சிறப்பு விருதுகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருள்களுக்கு தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வரி விலக்குகளை அளிக்க வேண்டும் என உலக நாடுகளிடம் கோரப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தைகளில் இந்த விவகாரத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. அதன் பயனாக, இந்திய தோல் பொருள்களுக்கு இஸ்ரேல் விரைவில் வரி விலக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜிசிசி (வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்) குழுவுடன் இதேபோன்ற பேச்சுவாா்த்தை அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் தொடங்கும் என்றாா் அவா்.

ஜிசிசி குழுவில், பக்ரைன், குவைத், ஓமன், கத்தாா், சவூதி அரேபியா மற்றும் யுஏஇ நாடுகள் உறுப்பினா்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.