சீக்கிய சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக கூறப்பட்ட புகாரின்பேரில், நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை கா் பகுதி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.
தில்லி எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்துடன் ஒப்பிட்டும், சீக்கிய சமூகத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் போல சித்தரித்தும் நடிகை கங்கனா ரணாவத் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு (டிஎஸ்ஜிஎம்சி) சாா்பில் மும்பை காா் பகுதி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 295ஏ (மத உணா்வுகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராக வேண்டுமென்றே தீங்கிழைத்தல்)) பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.