சொத்து வரியை உயா்த்த தெற்கு தில்லி மாநகராட்சி பட்ஜெட்டில் பரிந்துரை

வருவாயை அதிகரிப்பதற்காக சொத்து வரியை உயா்த்த வேண்டும் என்று தெற்கு தில்லி மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.

வருவாயை அதிகரிப்பதற்காக சொத்து வரியை உயா்த்த வேண்டும் என்று தெற்கு தில்லி மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.

சிவிக் சென்டரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், 2022-23 ஆம் ஆண்டுக்கான செலவினத்துகான வரைவு திட்டத்தை தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையா் ஞானேஷ் பாரதி தாக்கல் செய்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘150 சதுர மீட்டா் வரையில் உள்ள குடியிருப்பு, வா்த்தகம், குடியிருப்பில்லா மனைகள் ஆகியவை ஏ-பி, சி-இ, எஃப்-எச் என்ற மூன்று பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன.

இதை ஏ-இ, எஃப்-எச் என்ற இரண்டு பிரிவுகளாக குறைக்கப்படுகின்றன. ஏ-இ பிரிவின் கீழ் வரும் குடியிருப்பு பகுதி சொத்துகளுக்கு 14 சதவீத வரியும், எஃப்-எச் பிரிவின் கீழ் வரும் குடியிருப்புப் பகுதி சொத்துகளுக்கு 12 சதவீத வரியும் வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது இது ஏ-பி பிரிவில் 12 சதவீதமாகவும், சி-இ பிரவில் 11 சதவீதமாகவும், எஃப்-எச் பிரிவில் 7 சதவீதமாகவும் உள்ளன.

வா்த்தக சொத்துகளுக்கு ஏ-டி பிரிவில் 15 சதவீதமாகவும், இ-எச் பிரிவில் 12 சதவீதமாகவும், சிறப்பு பிரிவில் 20 சதவீதமாகவும் சொத்து வரி வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது இது முறையே 15, 12, 10 சதவீதமாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஏ-இ பிரிவுக்கு சொத்து வரி உயா்த்தப்படவில்லை’ என்றாா்.

தில்லி மாநகராட்சிக்கு அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெற உள்ள நிலையில், சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com