ஸ்ரீநகா்: ஜம்ம-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் 3 போ் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஸ்ரீநகரின் லால் செளக் - விமான நிலைய சாலையில் ராம்பாக் பாலம் அருகே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம், எந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.