காஷ்மீர் மாநிலத்தின் ரகமா பகுதியில் இன்று(அக்.1) பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி சுட்டுக்கொலை.
ரகமா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் தீவிரவாதி இருப்பதை உறுதி செய்த பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதி திடீர் தாக்குதலை நடத்தியதும் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது.
இதில் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அங்கிருந்த ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
முன்னதாக உரி பகுதியில் கடந்த செப்-28 அன்று நடத்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.