இம்மாத இறுதிக்குள் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்?

உள்கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க இம்மாத இறுதிக்குள் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இம்மாத இறுதிக்குள் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்?

புதுதில்லி: உள்கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க இம்மாத இறுதிக்குள் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள அக்கட்சித் தலைவா்கள் 23 போ் கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க செயற்குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா். பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல், கட்சியை சோ்ந்தவா்கள் வேறு கட்சிகளில் இணைவது போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்க அந்தக் கூட்டத்தைக் கூட்டுமாறு அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். அதிருப்தி தலைவா்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் அண்மையில் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், கட்சி சாா்ந்த ஆலோசனைகளை ஏற்க வேண்டும் எனவும், அவற்றை ஒடுக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருந்தாா்.

இந்நிலையில், செயற்குழுக் கூட்டம் குறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ‘‘செயற்குழுக் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று சோனியா காந்தி சூசகமாகத் தெரிவித்துள்ளாா். அதற்கான தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இம்மாத இறுதிக்குள் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. அதில் உள்கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது’’ என்று தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com