வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மோடியின் கோட்டையில் பிரியங்கா காந்தி; குறிவைக்கப்படும் உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து நாள்கள் வரை அங்கு பிரியங்கா காந்தி தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News image

பிரியங்கா காந்தி (கோப்புப்படம்)

Updated On :10 அக்டோபர் 2021, 11:33 am

DIN

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமையன்று சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு வழிபாடு மேற்கொண்டார். இதையடுத்து, பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் ரோஹானியா பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ள பேரணியில் அவர் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

சத்தீஸ்கர் முதல்வரும் உத்தரப் பிரதேச தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளருமான பூபேஷ் பாகேல், நாடாளுமன்ற உறுப்பினர் தீபேந்தர் சிங் ஹூடா ஆகியோரும் பிரியங்கா காந்தியுடன் சென்றுள்ளனர். முன்னதாக, வாரணாசியில் உள்ள மா துர்கா ஆலயத்தில் பிரியங்கா வழிபாடு மேற்கொண்டார்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து நாள்கள் வரை அங்கு பிரியங்கா காந்தி தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, தேர்தலுக்கான பரப்புரை திட்டம் வகுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.