தில்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் கர்நாடக அரசு வழங்க வேண்டிய 28.6 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
காவிரி நீரை முறைப்படுத்தி வழங்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 53வது கூட்டம் தில்லியில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் சார்பில் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
அப்போது இந்த மாதத்திற்கான கர்நாடக அரசு வழங்க வேண்டிய 28.6 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிக்க | 2021 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு