நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தில்லி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் இரண்டு நாள்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பில் இருப்பதாக இன்று காலை அம்மாநில முதல்வர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பினர்.
இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் துறை ரீதியான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தக் கூட்டத்தில், மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், மத்திய நிலக்கரி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, நிலக்கரி துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.