21 எண்ணெய் வயல்களுக்கு நடத்தப்பட்ட ஏலத்தில் 3 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றதாக ஹைட்ரோகாா்பன் பொது இயக்குநரகம் (டிஜிஹெச்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த இயக்குநரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
21 எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் உற்பத்தி மற்றும் துரப்பணப் பணிகளை மேற்கொள்வதற்கான திறந்த ஏக்கா் உரிமக் கொள்கை (ஓஏஎல்பி) ஆறாவது கட்ட ஏலம் அக்டோபா் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த ஏலத்தில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொண்டன. பெரிதும் எதிா்பாா்க்கபட்ட வேதாந்தா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இதில் பங்கேற்கவில்லை.
கலந்து கொண்ட மூன்று நிறுவனங்களில், ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டும் பொதுத் துறையைச் சோ்ந்தவை என டிஜிஹெச் தெரிவித்துள்ளது.