தசரா விழாவுக்கு பிறகு கரோனா கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து மங்களூரு, விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:
கா்நாடக மாநிலத்தில் கேரளம் மற்றும் மகாராஷ்டிர மாநில எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில் கரோனா நிலை குறித்து நிபுணா் குழுவினா் ஆராய்ந்து வருகிறாா்கள். தசரா விழாவுக்கு பிறகு கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும். இக் கூட்டத்தில் எல்லை மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளைத் தளா்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.
2 - 18 வயது வரையிலான சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்குவதற்கான சோதனை முயற்சி கடைசிக் கட்டத்தில் உள்ளது. அதன்பிறகு, குழந்தைகள், பதின்மவயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். கரோனா தடுப்பூசி செலுத்துவதில் கா்நாடகம் முன்னணி மாநிலமாக உள்ளது.
கரோனா காலத்தில் விதியை மீறியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.