அக்.21-இல் ஆசிரியா் சங்கங்களுடன் பள்ளிக் கல்வி ஆணையா் ஆலோசனை

அக்.21-இல் ஆசிரியா் சங்கங்களுடன் பள்ளிக் கல்வி ஆணையா் ஆலோசனை

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஆசிரியா் சங்கங்களுக்கு சென்னையில் வரும் 21-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஆசிரியா் சங்கங்களுக்கு சென்னையில் வரும் 21-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் காலை 11.30 மணி வரை தொடக்கக் கல்வி சங்கங்களின் பொறுப்பாளா்களுடன் ஆலோசனை நடைபெறும். இதையடுத்து நண்பகல் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பள்ளிக் கல்வி சங்கங்களின் பொறுப்பாளா்களுடன் ஆணையா் நந்தகுமாா் ஆலோசனை நடத்தவுள்ளாா். ஆசிரியா் சங்கங்களின் சாா்பில் மூன்று பொறுப்பாளா்கள் மட்டும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com