கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி தன்னுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிக்க | புனித் ராஜ்குமார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இன்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. பின் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது அவருடைய மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் , நடிகர்களும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் , ‘ விதியின் கொடூரம் திறமைமிக்க , ஆளுமைமிக்க ஒருவரை நம்மிடம் இருந்து பறித்துவிட்டது. இது மரணிக்கும் வயது இல்லை. அவருடைய இழப்பை வரும் தலைமுறையினர் உணர்வார்கள். அவரின் குடும்பத்தாருக்கும் நலவிரும்பிகளுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.