ஆப்கன் விவகாரம்: உயர்நிலைக் குழுவுடன் மோடி ஆலோசனை

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் பின் வாங்கியதையடுத்து ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டனர்.

இந்நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

மேலும் ஆப்கனின் தற்போதைய சூழல், தலிபான்கள் மூலம் மீண்டும் காஷ்மீரில் அத்துமீறல் நடைபெறுமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com