ஹைதராபாத்தில் அண்டை வீட்டு நபரால் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலையப் பகுதியில் 6 வயது சிறுமியை அதேபகுதியில் வசித்து வந்த 30 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
வியாழக்கிழமை காலை சிறுமி காணாமல் போனதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதன்பின்னர் காவல்துறையினர் தேடியதில், சிறுமியின் உடல் வெள்ளிக்கிழமை காலை குற்றவாளியின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட ராஜு தலைமறைவாக உள்ளதாகவும், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட ராஜூ என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைத் தேடி வருகிறோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.