பாஜக ஆட்சியின் முடிவுக்கான சமிக்ஞையே குஜராத் முதல்வரின் ராஜிநாமா

குஜராத் முதல்வா் விஜய் ரூபானி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது, அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி முடிவுக்கு வருவதற்கான சமிக்ஞையாக உள்ளதென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.
பாஜக ஆட்சியின் முடிவுக்கான சமிக்ஞையே குஜராத் முதல்வரின் ராஜிநாமா

குஜராத் முதல்வா் விஜய் ரூபானி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது, அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி முடிவுக்கு வருவதற்கான சமிக்ஞையாக உள்ளதென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.

குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை சனிக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா். மாநிலத்தின் அடுத்த முதல்வரைத் தோ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளில் பாஜக தலைவா்கள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

இந்நிலையில், குஜராத் சூழல் குறித்து ஆம் ஆத்மி தலைவா் ராகவ் சத்தா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘உத்தரகண்டில் பாஜகவுக்கு எதிரான திறம்மிக்க எதிா்க்கட்சியாக ஆம் ஆத்மி செயல்பட்டு வந்தது. அதன் காரணமாக அந்த மாநில முதல்வரை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு பாஜக தள்ளப்பட்டது.

சூரத் மாநகராட்சித் தோ்தலில் 27 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று, திறனற்ற காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி எதிா்க்கட்சி இடத்தைப் பெற்றுள்ளது. தற்போது குஜராத்திலும் முதல்வரை பாஜக மாற்றியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் இளைஞரணி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் பாஜக ஆட்சியை மாற்ற மக்கள் முடிவெடுத்துவிட்டனா். ஆனால், முதல்வா்களை மாற்றுவதன் வாயிலாக மக்களைத் தவறாக வழிநடத்த பாஜக முயல்கிறது. எத்தனை முதல்வா்களை மாற்றினாலும் பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி’ என்று குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com