தில்லியில் திங்கள்கிழமை காலை 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
தில்லி சப்ஜி மண்டி பகுதியில் 4 மாடிக் கட்டடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று காலை திடீரென கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கட்டடத்திற்குள் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.
இதுவரை இடிபாடுகளிலிருந்து ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 8 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.