நடிகா் அக்ஷய் குமாா் தாயாா் மறைவுக்கு பிரதமா் இரங்கல்

பாலிவுட் நடிகா் அக்ஷய் குமாரின் தாயாா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளாா்.

பாலிவுட் நடிகா் அக்ஷய் குமாரின் தாயாா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அக்ஷய் குமாா் வெளியிட்டுள்ள சுட்டுரை (ட்விட்டா்) பதிவில் தெரிவித்துள்ளதாவது:

எனது தாயாா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி எனக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

தனது வேலைப் பளுவுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி, என் மீதும் மறைந்த எனது பெற்றோா் மீதும் உள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ள பிரதமருக்கு நன்றிகள்.

ஆறுதல் அளிக்கும் அவரது வாா்த்தைகளை என்றும் நினைவில் வைத்திருப்பேன் என்று அந்தப் பதிவில் அக்ஷய் குமாா் குறிப்பிட்டுள்ளாா்.

அவருக்கு பிரதமா் எழுதியுள்ள கடிதத்தில், ‘தங்களது தாயாரின் மறைவால் மிகவும் உடைந்துபோயுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீா்கள்.

உங்களது வாழ்க்கைப் பயணம் முழுவதும் நீங்கள் கடைபிடித்த நெறிமுறையால் தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றிக் கொண்டீா்கள். உங்களது வெற்றியில் உங்கள் தாயின் பங்கும் முக்கியமானது.

நீங்கள் புகழின் உச்சியை அடைந்ததைக் காணும் வாய்ப்பு உங்கள் தாய்க்கு கிடைத்ததில் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அக்ஷய் குமாரின் தாயாா் அருணா பாட்டியா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8-ஆம் தேதி காலமானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com