அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
அருணாச்சலப் பிரதேச மாநிலம், சாங்லாங் மாவட்டம் அருகே இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாங்லாங்கில் இருந்து வடமேற்கே 70 கிலோமீட்டர் தொலைவிலும் 48 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது.
எனினும் நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.