ஹைதராபாத்: மோசடிகள் பல விதம், அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பது போல நாள்தோறும் புதிது புதிதாக மோசடிகள் உருவாகி வருகின்றன.
மக்களுக்கு காவல்துறை என்னதான் எச்சரிக்கைகளை அளித்தாலும், ஆசையோ, அதிகப் பணமோ, ஏதோ ஒன்று ஏற்படுத்தும் விருப்பத்தால் மக்கள் அவர்களை அறியாமல் ஏமாந்துவிடுகிறார்கள். பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வருந்துகிறார்.
அதற்காகவே, புதுவிதமான மோசடிகள் வந்ததும் அது குறித்து காவல்துறையினரும் சமூக வலைத்தளங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கின்றன. ஆனால் இதிலும் பாருங்கள் சிலர் பொய்யான எச்சரிக்கை செய்திகளை வெளியிட்டு மக்களை முட்டாளாக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
அதில் ஒன்றுதான்.. எண் ஒன்றை அழுத்தவும் என்ற மோசடி எச்சரிக்கைத் தகவல். வாட்ஸ்ஆப்பில் பல குழுக்களில் இந்த எச்சரிக்கைத் தகவல் கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் பரவி வருகிறது.
அதாவது, தனது நண்பருக்கு இந்த மோசடி நடந்ததாகவும், அவருக்கு 912250041117 என்ற எண்ணிலிருந்து அழைப்பு வந்தது, முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டீர்களா என்று கேள்வி எழுப்பி, ஆம் என்றால் எண் ஒன்றை அழுத்தவும் என்று சொன்னதாகவும், அவரும் எண் ஒன்றை அழுத்தியதும், அவரது செல்லிடப்பேசி செயலற்றுப் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சைபர் குற்றப் பிரிவு காவலர்கள் சார்பில், இந்த தகவலில் உண்மையில்லை என்றும், மேற்குறிப்பிட்ட எண், தற்போது செயல்பாட்டில் இல்லை, எனவே இந்த மோசடி குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இதுவரை அதுபோன்று யாரும் ஏமாற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் யாரும் இதுபோன்ற எச்சரிக்கைத் தகவல்களை உண்மை என்பதை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கும், மற்ற குழுக்களுக்கும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வி.பி. சிங்: வரலாறு நினைவுகொள்ள வேண்டிய ஓர் இந்தியப் பிரதமர்

சிலிண்டர் முதல் ஆதார் வரை..! ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!

சிக்க வைத்த 238 மணி நேர போன் பேச்சு, சிசிடிவி காட்சி! புணே கொலையில் காதலனுடன் சிக்கிய இளம்பெண்ணின் சூப்பர் பிளான்!
என்எல்சி பங்கு விற்பனை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP



