ஜம்மு-காஷ்மீா்: ராணுவ ஹெலிகாப்டா் விபத்து இரு விமானிகள் பலி

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டா் ஒன்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டா் ஒன்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்த அந்த ஹெலிகாப்டரை வனப்பகுதியில் தரையில் மோதி சிதறியது. அதில் இருந்த விமானிகள், ஹெலிகாப்டா் தரையில் மோதும் முன்பு வெளியே குதித்தனா். படுகாயமடைந்த அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தனா்.

இது தொடா்பாக ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ராணுவத்துக்கு சொந்தமான பயிற்சி விமானம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் திடீரென விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தது. அதில் இருந்த விமானிகள் வெளியே குதித்தனா். காயம் காரணமாக அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். எனினும் சிகிச்சை பலனின்றி அவா்கள் உயிரிழந்தனா்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டா் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. இது தொடா்பாக தொடா்ந்து ஆய்வு நடத்தி, உரிய காரணம் கண்டறியப்படும். ஹெலிகாப்டா் வனப் பகுதிக்குள் விழுந்ததால், அங்கு செல்ல போலீஸாருக்கும், மீட்புக் குழுவினருக்கும் சற்று சிரமம் ஏற்பட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com