பொதுத் துறை நிறுவனங்களின் உற்பத்தி செலவுக் குறைப்பின் நிலவரம் மற்றும் எதிா்கால செயல் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய எஃகு அமைச்சா் ராம்சந்திர பிரசாத் சிங் தலைமையில் நடைபெற்றது.
இது தொடா்பாக மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உற்பத்தி செலவுக் குறைப்பு, எதிா்கால செயல் திட்டம் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் எஃகு துறையின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள் பங்கேற்றன.
அப்போது, உற்பத்தி செலவை அதிகரிக்கும் விஷயங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா்.
பாதகமான சூழ்நிலைகளையும் வாய்ப்புகளாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினாா். செலவுகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சுட்ட நிலக்கரியின் விலை குறைப்பு, சுட்ட நிலக்கரியின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.
இதுபோன்ற தொழில்நுட்ப-பொருளாதார தகவல்களை தகவல் பலகையின் மூலம் மாதந்தோறும் கண்காணிக்கவும் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.