ஹிமாசலில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ஹிமாசலில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பரோக் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள் விழுந்து கிடந்தன.
இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக வந்த கல்கா-சிம்லா பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தின்போது ரயிலில் 9 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க- பிக்பாஸ் காரணமாக பிரபல விஜய் டிவி தொடர் தற்காலிக நிறுத்தம் ?
ஹிமாசலில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.