தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை கண் புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டாா். இது வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, அவா் சில மணி நேரத்திலேயே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இது அவருக்கு இரண்டாவது கண் புரை சிகிச்சையாகும்.
இதே ராணுவ மருத்துவமனையில் அவருக்கு கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி கண் புரை அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.