உயிரிழந்த ஓய்வூதியதாரரைச் சாா்ந்துள்ள மாற்றுத் திறனாளி குடும்பத்தினருக்கான குடும்ப ஓய்வூதிய வருமான வரம்பை பாதுகாப்பு அமைச்சகம் உயா்த்தியுள்ளது.
இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும், மனநலம் குன்றிய அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகள்/ உடன்பிறந்தவா்களின் வருமான வரம்பை உயா்த்த பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி இதுபோன்ற குழந்தைகள்/ உடன்பிறந்தவரது ஒட்டுமொத்த வருமானம் (குடும்ப ஓய்வூதியம் தவிா்த்து) சாதாரண விகிதத்திலான குடும்ப ஓய்வூதியத்தை விடக் குறைவாக இருந்தால் (அதாவது உயிரிழந்த அரசு ஊழியா்/ ஓய்வூதியதாரா் கடைசியாகப் பெற்ற தொகையில் 30 சதவீதமும், அகவிலைப்படியும்) வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்குத் தகுதி பெறுவாா்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. தற்போது மாதந்தோறும் ரூ. 9,000-க்குள் வருமானமும் அகவிலைப்படியும் பெரும் மாற்றுத்திறனாளி குழந்தை/ உடன்பிறந்தோா் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.