வடக்கு வஜிரிஸ்தானில் இரண்டு தீவிரவாத தாக்குதலில் 8 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடக்கு வஜிரிஸ்தான் பழங்குடியினர் மாவட்டத்தின் டதாகேல் தெஹ்சில் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் வாகனம் மீது தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில் 7 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மாவட்டத்தின் இஷாம் பகுதியில் நடந்த 2வது சம்பவத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
முதல் தாக்குதலைப் பொறுத்தவரை ஆப்கனின் எல்லைக்கு அருகில் உள்ள டதாகேல் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினரின் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ராக்கெட் மூலம் இயக்கப்படும் கைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஏழு வீரர்கள் கொல்லப்பட்டதாக வடக்கு வஜிரிஸ்தானின் மாவட்டத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது. பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.