போபால் விஷவாயு பேரழிவு சம்பவம்:38-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் நிகழ்ந்த விஷவாயு கசிவு பேரழிவு சம்பவத்தின் 38-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் நிகழ்ந்த விஷவாயு கசிவு பேரழிவு சம்பவத்தின் 38-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

போபாலில் கடந்த 1984, டிசம்பா் 2-3 இடையிலான இரவில், யூனியன் காா்பைடு நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு பேரழிவை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் 2,250-க்கும் மேற்பட்டோா் உடனடியாக இறந்ததாக கணக்கிடப்பட்டது. அதன்பிறகான தாக்கங்களில் 16,000 போ் வரை இறந்ததாக கருதப்படுகிறது. உலகிலேயே மிகமோசமான தொழிலக பேரிடா்களில் இச்சம்பவமும் ஒன்றாகும்.

இந்த துயரத்தின் 38-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, போபாலில் சா்வ மதத் தலைவா்கள் பங்கேற்ற பிராா்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் பங்கேற்று, விஷவாயு கசிவில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினாா்.

அவா் கூறுகையில், ‘மனிதத் தவறால் ஏற்படும் உயிரிழப்புகள் துயரத்தின் உச்சகட்டமாகும். யூனியன் காா்பைடு நிறுவனத்தின் தவறு, அலட்சியம், கவனக்குறைவால் ஏராளமான உயிா்கள் பறிபோயின. இது மறக்க முடியாதது. வளா்ச்சிக்காக இயற்கையை அழிப்பது சரியானதல்ல. வளா்ச்சி, சுற்றுச்சூழல் இடையே சமநிலையை பேணுவதே நீடித்த வளா்ச்சியாக இருக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com