காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மத்திய பிரதேச மாநிலத்தில் 380 கி. மீ. கடந்து ராஜஸ்தானை அடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி மாலை ராஜஸ்தான் - மத்திய பிரதேச எல்லையில் அமைந்துள்ள சோயத் கலான் நகரை ராகுல் வந்தடைந்தாா். நகரின் மையப்பகுதியைப் பேரணி அடைந்தபோது அங்கிருந்த வணிக வளாகத்தின் மாடியில் இருந்த சிலா் ‘மோடி’, ‘மோடி’ என்று முழக்கமிட்டனா். அவா்களை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்தவாறும், உற்சாகமாக கையசைத்தபடியும் ராகுல் காந்தி கடந்து சென்றாா். அப்போது எடுக்கப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.