இந்தியா
உள்ளாடையில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம்! விமான நிலையத்தில் சிக்கியப் பெண்!
துபையில் இருந்து இந்தியா வந்த இளம்பெண், தான் அணிந்திருந்த உள்ளாடையில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கிலோ தங்கத்தைக் கடத்தி வந்ததாக கரிப்பூர் விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.
கோழிக்கோடு: துபையில் இருந்து இந்தியா வந்த இளம்பெண், தான் அணிந்திருந்த உள்ளாடையில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கிலோ தங்கத்தைக் கடத்தி வந்ததாக கரிப்பூர் விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் கரிப்பூர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் தங்கம் கலந்த பேஸ்ட் அடங்கிய கலவை, அவரது உள்ளாடையில் வைத்து தைக்கப்பட்டுள்ளது என்றார்.
விமான நிலையத்தில் சுங்கவரித் துறை சோதனை முடித்து வெளியேறிய போது, தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் இளம் பெண்ணை டெர்மினல் பார்க்கிங் ஏரியாவில் தேடினர்.
முதலில் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், அவளை பரிசோதித்தபோது தங்கம் அடங்கிய பேஸ்ட் கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட தங்கம் சுமார் 1.88 கிலோ எடை கொண்டதாக உள்ளது என்றார் சுங்கத் துறை அதிகாரி.