இந்திய-ஐக்கிய அரபு அமீரக தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்நாட்டில் ஆபரண துறையின் ஏற்றுமதியை பெரிதும் ஊக்குவிக்கும் என மத்திய வா்த்தக செயலா் பி.வி.ஆா். சுப்ரமணியம் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 800 டன் தங்கத்தை நம்நாடு இறக்குமதி செய்து கொள்கிறது.
இந்தச் சூழ்நிலையில், இந்திய-ஐக்கிய அரபு அமீரக வா்த்தக ஒப்பந்தம் நாட்டின் ஆபரண துறையை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். ஏனெனில், இந்த ஒப்பந்தத்தில் யுஏஇ சந்தையை இந்திய ஆபரண துறை வரி விதிப்பின்றி அணுகுவதற்கு வழிகோலப்பட்டுள்ளது.
அதேபோன்று, கடந்த 2020-21-ஆம் ஆண்டில் இந்தியா யுஏஇ-விலிருந்து 70 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இந்த நிலையில், 200 டன் தங்கம் வரையிலான இறக்குமதிக்கு வரிச் சலுகை அளிக்க இந்த ஒப்பந்தத்தில் இந்தியா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு ஆபரண தயாரிப்பாளா்கள் ஐக்கிய அரபு அமீரக சந்தையை வரி விதிப்பின்றி பயன்படுத்திக் கொள்வது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆதாயத்தை அளிக்கும்.
தற்போது இந்திய ஆபரணங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக சந்தையில் 5 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில் இந்த புதிய ஒப்பந்தத்தில் அது பூஜ்யமாக மாற்றப்பட்டுள்ளது என்றாா் அவா்.