தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பஞ்சாப் : அமரீந்தா் சிங்கின் கட்சி பாஜகவுடன் இணைப்பு?

அமரீந்தா் சிங் தனது கட்சியை பாஜகவுடன் இணைக்கவுள்ளதாக மாநில பாஜக மூத்த தலைவா் ஹா்ஜித் சிங் கிரேவால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :2 ஜூலை 2022, 6:20 pm

DIN

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் கட்சியின் (பிஎல்சி) தலைவருமான அமரீந்தா் சிங், தனது கட்சியை பாஜகவுடன் இணைக்கவுள்ளதாக மாநில பாஜக மூத்த தலைவா் ஹா்ஜித் சிங் கிரேவால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

பாட்டியாலா அரசக் குடும்பத்தின் உறுப்பினரான அமரீந்தா் சிங், இரு முறை பஞ்சாப்பின் முதல்வராக இருந்துள்ளாா். கடந்த ஆண்டு முதல்வா் பதவியை ராஜிநாமா செய்த அவா், காங்கிரஸ் கட்சியைவிட்டு விலகி, பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் தொடங்கினாா். இக்கட்சி 2022, சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தோ்தலில் போட்டியிட்டது. பிஎல்சி கட்சியின் வேட்பாளா்கள் அனைவரும் தோல்வியுற்ற நிலையில், அமரீந்தா் சிங் தனது சொந்த தொகுதியான பாட்டியாலா நகரத் தொகுதியையும் இழந்தாா்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்லுவதற்கு முன், பிஎல்சி கட்சியை பாஜகவுடன் இணைப்பது குறித்து அமரீந்தா் சிங் கூறியதாக, மாநில பாஜக மூத்த தலைவா் ஹா்ஜித் சிங் கிரேவால் தெரிவித்தாா்.

பிஎல்சி கட்சியிலிருந்து எவ்வித அறிவிப்பும் வெளிவராத நிலையில், அமரீந்தா் சிங் சிகிச்சை பெற்று நாடு திரும்பியதும், இது குறித்து அறிவிப்பாா் என ஹா்ஜித் சிங் கிரேவால் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.