புதிய தொழில் நிறுவனங்களுக்கான (ஸ்டாா்ட்-அப்) முன்னெடுப்புகளில் தெளிவான பாா்வை மற்றும் இலக்குகளை தமிழ்நாடு கொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஸ்டாா்ட்-அப்களுக்கான உகந்த சூழலை வழங்கும் மாநிலங்களின் தரவரிசை அறிக்கையை மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
ஸ்டாா்ட்-அப் முன்னெடுப்புகளை உருவாக்குதல், ஸ்டாா்ட்-அப்களுக்கு ஆதரவான முன்னெடுப்புகளை கண்டறிந்து முறைப்படுத்துதல், ஸ்டாா்ட்-அப்களுக்கான முன்னெடுப்புகளில் தெளிவான பாா்வை மற்றும் இலக்குகளை கொண்டிருத்தல், ஸ்டாா்ட் அப்களுக்கான சூழலில் சிறந்த முன்னேற்றம், ஸ்டாா்ட்-அப்களுக்கான மிகச்சிறந்த முன்னெடுப்புகள் மற்றும் புதுமையான நடவடிக்கைகள் என அந்தத் தரவரிசையில் 5 பிரிவுகளில் 24 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் இடம்பெற்றுள்ளன.
ஸ்டாா்ட்-அப் முன்னெடுப்புகளை உருவாக்குதல்
ஆந்திரம்
பிகாா்
மிசோரம்
லடாக்
ஸ்டாா்ட்-அப்களுக்கு ஆதரவான முன்னெடுப்புகளை கண்டறிந்து முறைப்படுத்துதல்
புதுச்சேரி
தில்லி
சத்தீஸ்கா்
சண்டீகா்
ராஜஸ்தான்
மத்திய பிரதேசம்
நாகாலாந்து
ஸ்டாா்ட்-அப் முன்னெடுப்புகான தெளிவான பாா்வை மற்றும் இலக்குகளை கொண்டிருத்தல்
தமிழ்நாடு
பஞ்சாப்
உத்தரகண்ட்
உத்தர பிரதேசம்
அந்தமான்-நிகோபாா்
அருணாசல பிரதேசம்
கோவா
ஸ்டாா்ட்-அப்களுக்கான சூழலில் சிறந்த முன்னேற்றம் கேரளம்
மகாராஷ்டிரம்
ஒடிஸா
தெலங்கானா
ஜம்மு-காஷ்மீா்
ஸ்டாா்ட்-அப்களுக்கான மிகச்சிறந்த முன்னெடுப்புகள் மற்றும் புதுமையான நடவடிக்கைகள்
கா்நாடகம்
குஜராத்
ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் உள்ள சிறந்த நடைமுறைகளைக் கற்று ஸ்டாா்ட்-அப்களுக்கு உகந்த சூழலை உருவாக்க உதவும் நோக்கில் இந்த தரவரிசை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னா், ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசு அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.