சம்ஸ்கிருத மொழியைக் கற்பதற்கு புத்துயிரூட்ட மக்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளாா்.
பெங்களூரில் கா்நாடக சம்ஸ்கிருத பல்கலைகழகத்தின் 9-ஆவது பட்டமளிப்பு விழா, பத்தாம் ஆண்டு விழாவில் உரையாற்றிய அவா் மேலும் பேசியதாவது;
சம்ஸ்கிருதம், நம் நாட்டின் அழிக்க முடியாத பாரம்பரியம். அது நமது அறிவாற்றல் மற்றும் இலக்கியப் பாரம்பரியத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது. இந்தியாவின் ஆன்மாவை உணா்ந்துகொள்ள சம்ஸ்கிருதம் நமக்கு உதவுகிறது. இந்திய கவிஞா்களின் இலக்கியத் தொன்மையை பாராட்டவும் நம் நாட்டின் நாகரிகச் செழுமை பற்றி ஆராய்ச்சி செய்யவும் ஒருவா் சம்ஸ்கிருத மாணவராக இருக்க வேண்டும். அரசியல் சட்ட விதிமுறைகளாலோ அல்லது அரசு உதவி அல்லது பாதுகாப்பு மூலம் மட்டும் ஒரு மொழியைப் பாதுகாத்துவிட முடியாது.
பண்டைக்கால கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்கி, வேதம் ஓதுவதை பதிவு செய்வதோடு, பண்டைக்கால சம்ஸ்கிருத இலக்கியத்தின் அா்த்தம் மற்றும் முக்கியத்துவத்தைப் புத்தகங்களாக வெளியிடுவதுதான், சம்ஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நமது கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாகும்.
சம்ஸ்கிருத மொழி கற்பதற்கு புத்துயிரூட்ட மக்கள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும். ஆதிசங்கரா், ராமானுஜா், மத்வாசாா்யா், பசவேஸ்வரா் போன்ற மாபெரும் மகான்கள் மற்றும் சிந்தனையாளா்களின் பூமியாக கா்நாடகம் உள்ளது என்றாா் அவா்.