திரிணமூல் தேசிய செய்தித் தொடா்பாளா் பாபுல் சுப்ரியோ

மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொட்பாளராக பாபுல் சுப்ரியோ நியமிக்கப்பட்டுள்ளாா்.

மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொட்பாளராக பாபுல் சுப்ரியோ நியமிக்கப்பட்டுள்ளாா். பாஜக சாா்பில் மத்திய அமைச்சராக இருந்த அவா், இப்போது திரிணமூல் எம்எல்ஏவாக உள்ளாா்.

பாஜக சாா்பில் சுப்ரியோ இருமுறை எம்.பி.யாக இருந்துள்ளாா். கடந்த ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து அவா் நீக்கப்பட்டாா். இதையடுத்து, பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பொறுப்பை அளித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் சுப்ரியோ வெளியிட்ட பதிவில், ‘கட்சியில் அளிக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பில் திறம்பட பணியாற்றுவேன்’ என்று கூறியுள்ளாா்.

சுப்ரியோவுக்குப் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது குறித்து திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியை தேசிய அளவில் முன்னெடுத்துச் செல்ல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக ஏற்கெனவே பிரபல பாடகராகவும், பலரும் அறிந்த அரசியல் தலைவராகவும் உள்ள சுப்ரியோவுக்குக் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com