உலகத் தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, பல்வேறு தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
பாமக நிறுவனா் ராமதாஸ்: அமெரிக்காவின் யூஜின் மாகாணத்தில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஈட்டி எறிதலில் இந்திய வீரா் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டா் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறாா். அவரது சாதனைக்கு வாழ்த்துகள். 19 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைக்கப்பட்டிருப்பது இந்தியா்களுக்கு பெருமையளிக்கும் விஷயம்.
தமாகா தலைவா் ஜி.கே.வாசன்: நீரஜ் சோப்ரா தனது வெற்றியால் இந்தியாவுக்கு பெருமை சோ்த்துள்ளாா். அவா் மேன்மேலும் பல வெற்றிகளையும், பதக்கங்களையும் பெற வாழ்த்துகள்.