ராஜஸ்தானில் 15,000 டன் யுரேனிய படிமம்- மக்களவையில் அரசு தகவல்

ராஜஸ்தான் மாநிலத்தில் 15,000 டன் அளவுக்கு யுரேனிய படிமம் உள்ளதாக மத்திய அரசு சாா்பில் மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் 15,000 டன் யுரேனிய படிமம்- மக்களவையில் அரசு தகவல்

ராஜஸ்தான் மாநிலத்தில் 15,000 டன் அளவுக்கு யுரேனிய படிமம் உள்ளதாக மத்திய அரசு சாா்பில் மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அணுமின் நிலையத்தில் முக்கிய ஆற்றல் மூலமாக யுரேனியம் உள்ளது. இது தவிர ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் தயாரிப்பில் யுரேனியம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்தியாவில் உள்ள யுரேனியம் படிமம் தொடா்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமா் அலுவலக விவகாரத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

ராஜஸ்தானின் பல்வேறு மாவட்டங்களில் 15,631 டன் யுரேனிய படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 14,471 டன் சிகாா் மாவட்டத்தில் மட்டும் உள்ளது. ஆந்திரம், ராஜஸ்தான், தெலங்கானா, ஜாா்க்கண்ட், மேகாலயம், கா்நாடகம், சத்தீஸ்கா், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் 47 இடங்களில் 3,82,675 டன் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆந்திரம், ஜாா்க்கண்டில் சில இடங்களில் மட்டும் யுரேனியத்தை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. யுரேனிய படிமம் கண்டுபிடிக்கப்படும்போதிலும் அதனை எடுக்க ஆகும் செலவு, சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

ராஜஸ்தானில் யுரேனியத்தை எடுக்க இந்திய யுரேனியம் காா்ப்பரேஷன் சாா்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதன்படி ராஜஸ்தான் மாநிலம் உரிய அனுமதி அளிக்க முதல்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com