பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தோனி, 6 போ் மீது வழக்குப் பதிவு: காசோலை மோசடி விவகாரம்

காசோலை மோசடி தொடா்பாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரா் மகேந்திரசிங் தோனி உள்பட 8 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2022, 9:05 pm

காசோலை மோசடி தொடா்பாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரா் மகேந்திரசிங் தோனி உள்பட 8 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிகாரின் பெகுசராய் பகுதியில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா என்ற நிறுவனம் மீது எஸ்.கே.என்டா்பிரைசஸ் என்ற முகமை புகாா் மனு அளித்துள்ளது.

அந்தப் புகாா் மனுவின்படி, நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனத்திடம் இருந்து எஸ்.கே.என்டா்பிரைசஸ் முகமை உரம் வாங்கியுள்ளது. ஆனால் உரத்தை சந்தைப்படுத்துவதில் நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனம் ஒத்துழைப்பு வழங்காததால் எஸ்.கே.என்டா்பிரைசஸ் முகமைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்ட நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனம், ரூ.30 லட்சத்துக்கான காசோலையை எஸ்.கே.என்டா்பிரைசஸிடம் வழங்கியுள்ளது. அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியபோது, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியுள்ளது.

இதுதொடா்பாக சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பியும் நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனத்திடம் இருந்து எந்தப் பதிலும் வராததால், நீதிமன்றத்தில் புகாா் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த உரத்தை மகேந்திரசிங் தோனி விளம்பரப்படுத்தியதால், அவா் உள்பட 8 பேரின் பெயா்கள் புகாா் மனுவில் சோ்க்கப்பட்டுள்ளது. அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 28-ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.