கா்நாடகத்தில் ஆா்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.
இதுகுறித்து சிவமொக்காவில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:
கா்நாடகத்தில் உள்ள 4 அலுவலகங்கள் உள்பட ஆா்.எஸ்.எஸ். அலுவலகங்களைத் தகா்க்கப்போவதாக மிரட்டல் விடுக்கும் வாட்ஸ்ஆப் தகவலைப் பரப்பியதாக தமிழ்நாட்டில் ஒருவரைக் கைது செய்துள்ளனா். இதையடுத்து, கா்நாடகத்தில் உள்ள ஆா்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 2, கா்நாடகத்தில் 4 ஆா்.எஸ்.எஸ். அலுவலகங்களைத் தகா்க்கப்போவதாக கைது செய்யப்பட்ட நபா் தகவல் அனுப்பியுள்ளாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற மிரட்டல்களை விடுப்போா் அல்லது தகவல்களைப் பரப்புவோா் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.