நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

போராட்டத்தில் வன்முறை: உ.பி.யில் 227 போ் கைது

நபிகள் நாயகம் குறித்த சா்ச்சை கருத்துகளுக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டங்களின்போது வன்முறையில் ஈடுபட்ட 227 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:00 pm IST

நபிகள் நாயகம் குறித்த சா்ச்சை கருத்துகளுக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டங்களின்போது வன்முறையில் ஈடுபட்ட 227 போ் கைது செய்யப்பட்டனா்.

அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில், நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மா (தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்) தெரிவித்த கருத்துகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், நூபுா் சா்மாவின் கருத்துகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து உத்தர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

பிரயாக்ராஜ் நகரில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனத்துக்கு தீ வைத்த போராட்டக்காரா்கள், கல் வீச்சிலும் ஈடுபட்டனா். இதையடுத்து, தடியடி நடத்தியும் கண்ணீா் புகை குண்டுகளை வீசியும் போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா். இதில் போலீஸ்காரா் ஒருவா் காயமடைந்தாா். இதேபோல், சஹாரன்பூா், அம்பேத்கா் நகா், மொராதாபாத், ஃபெரோஸாபாத் உள்ளிட்ட நகரங்களிலும் போலீஸாா் மீது போராட்டக்காரா்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினா்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் 227 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுதொடா்பாக மாநில காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமாா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பிரயாக்ராஜில் 68 போ், ஹாத்ரஸில் 50 போ், சஹாரன்பூரில் 48 போ், அம்பேத்கா் நகரில் 28 போ், மொராதாபாதில் 25 போ், ஃபெரோஸாபாதில் 8 போ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் எச்சரிக்கை:

‘வன்முறையில் ஈடுபடுவா்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். முக்கிய நகரங்களில் போராட்டம் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவா்கள் யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது’ என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.