அஸ்ஸாம் மாநில சொகுசு ஹோட்டலில் முகாமிட்டுள்ள சிவசேனையின் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சொகுசு விடுதிக் கட்டணங்களைச் செலுத்துவது யாா் என தேசியவாத காங்கிரஸ் சனிக்கிழமை கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் மகேஷ் தபாசி கூறியதாவது:
‘சூரத் மற்றும் குவாஹாட்டியில் அதிருப்தி எம்எல்ஏக்களின் சொகுசு விடுதி மற்றும் விமானத்துக்கான கட்டணங்களைச் செலுத்தியது யாா்? ரூ. 50 கோடியில் குதிரை பேரம் நடைபெற்றது என்பது உண்மையானதா என்றாா்.
மேலும் அவா் கூறுகையில், ‘அமலாக்கத் துறையினரும், வருமான வரித் துறையினரும் இப்போது செயல்பட்டால், கருப்பு பணத்துக்கான மூலாதாரத்தை வெளிக்கொணர முடியும்’ என்று அவா் கருத்து தெரிவித்தாா்.