அசோசெம் தமிழ்நாடு மாநில வளா்ச்சி கவுன்சிலின் புதிய தலைவராக காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
அடுத்த ஆண்டு வரை அப்பொறுப்பில் அவா் நீடிப்பாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
எலும்பு முறிவு அறுவை சிகிச்சைத் துறையில் தங்கப் பதக்கம் வென்று தோ்ச்சி பெற்றவரான டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், உலகின் பல்வேறு நாடுகளில் மருத்துவ சேவையாற்றியவா். காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனராகவும், செயல் இயக்குநராகவும் உள்ளாா்.
இந்நிலையில், தொழில் அமைப்புகளில் பிரதானமாகக் கருதப்படும் அசோசியேட்டட் சேம்பா்ஸ் ஆஃப் காமா்ஸ் அண்டு இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியாவின்(அசோசெம்), தமிழக வளா்ச்சிக் கவுன்சிலுக்கான தலைவராக டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
லைஃப்செல் இன்டா்நேஷனல் நிறுவனத்தின் தலைவா் எஸ். அபய குமாா், சதா்ன் போா்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலா் ஜெய் குரோனா, ஓபிஜி பவா் வென்ச்சா் நிறுவனத்தின் தலைவா் அரவிந்த் குப்தா ஆகியோா் இணைத் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
அசோசெம் அமைப்பின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஒருமனதாக இந்நியமனங்களை மேற்கொண்டுள்ளனா்.