குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு (64) தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கண் புரை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் வலது கண்ணில் ஞாயிற்றுக்கிழமை கண் புரை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தில்லி ராணுவ மருத்துவமனையில் இருந்து அவா் வீடு திரும்பிவிட்டாா். முன்னதாக, அவரது இடது கண்ணில் கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி கண் புரைக்கான அறுவைச் சிகிச்சை இதே ராணுவ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக கடந்த ஜூலை 25-ஆம் தேதி திரௌபதி முா்மு பொறுப்பேற்றாா்.