காங்கிரஸ் தலைவரான பின் முதன் முறையாக தொண்டா்களை சந்தித்தாா் காா்கே

காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக திங்கள்கிழமை, தில்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்தாா் மல்லிகாா்ஜுன காா்கே.
மல்லிகாா்ஜுன காா்கே
மல்லிகாா்ஜுன காா்கே

காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக திங்கள்கிழமை, தில்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்தாா் மல்லிகாா்ஜுன காா்கே.

கடந்த மாதம், காங்கிரஸ் தலைவா் பதவிக்காக நடைபெற்ற தோ்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் எதிா்த்து போட்டியிட்ட சசி தரூரை காா்கே தோற்கடித்தாா். இதையடுத்து, அக்டோபா் 19-ஆம் தேதி காங்கிரஸின் புதிய தலைவராக அவா் அறிவிக்கப்பட்டாா்.

முன்னாள் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்டோபா் 26-ஆம் தேதி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றப்பின் பேசிய காா்கே, ‘கட்சித் தொண்டா்கள், தலைவா்கள் என அனைவரும் எனக்கு சமமானவா்களே. காங்கிரஸ் பேரியக்கத்தை வலுப்படுத்த அனைவருடனும் இணைந்து பணியாற்றுவேன்’ எனத் தெரிவித்தாா்.

சோனியாவும், ராகுல் காந்தியும் வகித்த காங்கிரஸ் தலைவா் பதவிக்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவராகப் பொறுப்பேற்றுயிருக்கிறாா் காா்கே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com