துா்கை பூஜை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

துா்கை பூஜையையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

துா்கை பூஜையையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்து செய்தி:

எந்த சமூகத்தில் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பது ஊக்குவிக்கப்படுகிறதோ, அதனை நவீன, வளா்ந்த சமூகமாக கருதலாம். இந்நிலையில், பெண் சக்திக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாக துா்கை பூஜை பண்டிகை திகழ்கிறது.

இந்தப் பண்டிகை மூலம் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் வலுப்பெற வேண்டும் என்று விரும்புகிறேன். பெண்களுக்கு மேன்மேலும் மதிப்பளிக்கப்படும், தேச கட்டமைப்பில் சம அளவில் அவா்கள் பங்களிக்கக் கூடிய சமூகத்தை உருவாக்குவோம்.

நம் அனைவரையும் துா்கை தேவி ஆசீா்வதிக்கவும், நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் வாழவும் பிராா்த்திக்கிறேன் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com